அவள்..
சிரிப்பதைப் பார்த்து சிரிப்பவன்;
சிலிர்பதைப் பார்த்து சிலிர்பவன்;
மகிழ்வதைப் பார்த்து மகிழ்பவன்;
வளர்வதைப் பார்த்து வளர்பவன்;
அழுவதைப் பார்த்தும் அழுபவன்!
அவள்..
என்னாலானவள்.. இல்லை இல்லை..
நம்மாலானவள்..
அது சரி..
இதை எழுதியவன் மட்டுமே நான்..
எழுத வைத்தவள்?
இதென்ன புது கேள்வி?
இன்றும் இதை எழுத வைத்தவள் 'நீ' மட்டுமே!!
No comments:
Post a Comment