சிகப்பு.. வறுமையின் நிறம்? வன்முறையின் நிறம்? ஹா.. என்னிடம் கேளுங்கள்.. . . சிகப்பு.. என்னவள் அன்பின் நிறம்.. என்னவள் காதல் நிறம்.. என்னவள் உதட்டின் நிறம்.. அந்த உதட்டின் அச்சு விழுந்த - என் கன்னத்தின் நிறம்.. இது சோகத்தின் வறுமை - என் கண்களில்.. இது முத்தத்தின் வன்முறை - என் கன்னங்களில்..
உன் முத்து சிரிப்புகளை சேமிக்கும்வசதி மட்டும் வங்கிகளில் இருந்திருந்தால்,என் கனவில் நீ சிரித்த கணக்கில் வராத அந்த கறுப்பு சிரிப்புகள் இன்றுசுவிட்சர்லாந்தில் பதுங்கியிருக்கும்..
காத்திருக்கிறேன்... சிமிட்டிக் கொண்டே பார்க்கும் - உன் குறும்பு பார்வைக்காக.. பார்த்துக் கொண்டே பேசும் - உன் அக்கறை வார்த்தைக்காக.. பேசிக் கொண்டே வருடும் - உன் அசட்டு கொஞ்சலுக்காக.. ,, கொஞ்சிக் கொண்டே........... ,, போதும் போதும்.. இந்த வலைப்பூவும் நாணித்து விடும் என் வரிகளைக் கண்டு....
பார்க்கும் அனைத்திலும் உன் முகம்.. வருந்தினேன் காட்சி பிழையோ என்று!! சிரித்துக் கொண்டே சொன்னது உள் மனம்..., கண்டிப்பாக உன் காதலில் பிழை இல்லை என்று..!!