Monday, December 17, 2018

கண்ணாமூச்சி

நான் பாடும்பொழுது நீயும் பாடுகிறாயோ?
நாங்கள் பேசும் பொழுது நீயும் சேர்ந்து பேசுகிறாயோ?
நான் பார்க்காத பொழுது அசைந்தாடி கண்ணாமூச்சி ஆட்டம் கற்றுத் தருகிறாயோ?
நீ என்ன செய்தாலும் அதை எனக்காக தான் செய்கிறாய் என்று எண்ண வைக்கிறாயே!
உணர்கிறேன்.. ஆம்..
தொடும்பொழுது உணர்கிறேன்.,
உன்னைத் தொடாமலேயே..!