Saturday, August 9, 2025

உனக்கென நீ!

கோடிகளில் ஒருத்தியாய்..

உனக்கென நீ பிறந்தாய்!

கோபுரத்தின் உச்சியாய்..

உனக்கென நீ வளர்ந்தாய்!

வெண்பனியில் மின்னும் ஒளியாய்..

உனக்கென நீ சிரித்தாய்!

தாமரையின் இதழாய்..

உனக்கென பூ மலர்ந்தாய்!

அறிவின் அறிவாய்..

உனக்கென படித்தாய்!

உனக்காய்.. உனக்காய்..

உனக்கென வாழ்ந்து மகிழ்ந்தாய்!

பருவங்கள் ஓடின!!

 

நிற்க!

என்றும் நீ என் குமாரி தான்!

பருவம் என காலங்களை குறித்தேன்!!

 

பருவங்கள் ஓடின..

உனக்கென நானானேன்!

எனக்கென நீயானாய்!!


மீண்டும் நிற்க..

இது காதல் கவிதையல்ல..

 

பருவங்கள் ஓடின..
உனக்கென நானானேன்!
எனக்கென நீயானாய்!!

நமக்கென சிரித்தாய்..

நமக்கென அழுதாய்..

நமக்கென குதுகளித்தாய்..

உனக்கே தெரியாமல் உனக்காய் நீயிருந்து காலங்களானதோ என் தங்கமே?

 

இன்று..

உனக்கென சிரித்தாய்!

உனக்கென மகிழ்ந்தாய்!

உனக்கென ஆடினாய்!

உனக்கென நட்புறவாடினாய்!

 

உனக்கென கவிதை எழுத என் மனதும் மூளையும் மீண்டும் இன்று போட்டியிட்டது!

நீ உனக்கென மீண்டும் இருந்த இந்நாளில்!!