Wednesday, September 19, 2012

ஒரு நாள் ஏக்கம்..

இலட்சம் முறை துடிக்கும் இதயம்.,
சிலமுறை உன் காதருகே துடித்திட.!
பல்லாயிரம் முறை உட்கொள்ளும் சுவாசக் காற்று.,
சிலமுறை உன் மூச்சுக் காற்றாய் இருந்திட.!
பன்னூறு முறை பேசும் வார்த்தைகள்.,
சிலமுறை உனக்காய் உன்னிடம் பேசிட.!
மூன்று வேளை உணவு.,
உன் கை ருசியாய் இருந்திட.!
விடியல் அந்தி இரு வேளை.,
உன் பார்வையில் உலா வர.!
உறங்கிடும் ஒரு வேளை மட்டும்.,
உன் வியர்வையில் குளித்திட.!!!