Thursday, October 18, 2012

எப்பொழுது?

சற்று முன் நின்ற மழை.,
சிலிர்க்க வைக்கும் ஈரக்காற்று.,
யாவும் முடங்கிய இரவு.,
ஜன்னல் ஓர இரயில் பயணம்.,
இவற்றுடன்...
என்னவள் மூச்சுக் காற்றின் வெப்பம்.,
எப்பொழுது..?

Wednesday, September 19, 2012

ஒரு நாள் ஏக்கம்..

இலட்சம் முறை துடிக்கும் இதயம்.,
சிலமுறை உன் காதருகே துடித்திட.!
பல்லாயிரம் முறை உட்கொள்ளும் சுவாசக் காற்று.,
சிலமுறை உன் மூச்சுக் காற்றாய் இருந்திட.!
பன்னூறு முறை பேசும் வார்த்தைகள்.,
சிலமுறை உனக்காய் உன்னிடம் பேசிட.!
மூன்று வேளை உணவு.,
உன் கை ருசியாய் இருந்திட.!
விடியல் அந்தி இரு வேளை.,
உன் பார்வையில் உலா வர.!
உறங்கிடும் ஒரு வேளை மட்டும்.,
உன் வியர்வையில் குளித்திட.!!!

Saturday, August 11, 2012

நீயும் நானும்..

உன்னிடம் பேசி..,
உனக்காக நானும் பேசி...
இடையிடையே  வரும் கேளிக்கையால்,
உனக்காக நான் சிரித்து, அதைக் கண்டு
எனக்காகவும் நான் சிரித்து மகிழும் தனிமையின் இனிமை
கசியும் கண்ணீருக்கு மட்டுமே தெரிந்த இரகசியம்...

Saturday, June 30, 2012

தென்றலே...

எனைத் தீண்டும் தென்றலே..!
அவள் அணைத்து விடுத்த தென்றலாய் எண்ணி
உன்னை அணைக்கின்றேன்...!
மறுக்காமல் எனது முத்தங்களையும் சேர்த்துவிடேன்
அவளிடம்.......!

விக்கல்..




நினைவு உன்னிடம்..
விக்கல் என்னிடம்..
இங்கே தண்ணீர்கேது இடம்?!?!

Saturday, February 11, 2012

கனவு..


நிலா..
அன்றைய தினத்தின் முற்றுப்புள்ளி..
என்னவளின் வருகைக்கான பிள்ளையார் சுழி..